அறிவகம்

‘Uncategorized’ பகுப்பில் உள்ள வரவுகள்

காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை – 16)

அக்டோபர் 9, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம்.

இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்வோம்.

பொருள் வெளி நிலைமாற்றம் தான் இயக்கம்
இயக்கத்தின் ஒப்பீடுகள் தான் அறிவு.
அறிவின் அளவீடுகள் தான் காலம்.

உதாரணமாக: பொருள் வெளியாவது இயக்கம். பொருள் வெளியாகி மீண்டும் பொருளாகும் போது பிந்தைய பொருளுக்கும் முந்தைய பொருளுடனான அறியும் திறன்(ஆற்றல்) அறிவு. அறிவின் நிலை அளவீடுகள் காலமாகிறது. அதாவது பிந்தைய பொருளுக்கு முந்தைய பொருள் இறந்ததகாலம்., எதிர்வரும் பொருள் எதிர்காலம்.

இயக்கம், அறிவு, காலம் இவற்றிற்கான வேறுபாடுகளை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்

உதாரணமாக 1, 2, 3, 5, 8, 13, 21 இந்த முறைபடிதான் காலஅறிவு அமைகிறது. இதில் இயக்கம் என்பது 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, …. இப்படி சீராக வருவது. ஆனால் அறிவு என்பது 1, 2, 3, 5, 8, 13… என அமையும். அறிவின் சுற்றுகள் படி தான் காலமும் அமையும். இதில் 1, 2, 3, 5, 8 இதெல்லாம் அறிவு. இதில் காலம் அறியப்படும். இடைபட்ட 4, 6, 7, இதெல்லாம் மாயைகள் இது அறிவுக்கு உட்படாது. ஆனால் இயக்கத்துக்கு உட்படும். இயக்கம் எல்லாம் காலமாகாது. ஆனால் அறிவும் காலமும் இயக்கத்துக்கு உட்பட்டது.

இயக்கம் என்பது படிப்படியாக சீராக தான் நிகழும். ஆனால் காலம் என்பது அப்படியல்ல. காலம் அறிவை பொருத்தே அமையும். இதை ஜன்ஸ்டீன் உதாரணத்திலேயே விளக்குகிறேன். காதலிக்காக காத்திருக்கும் நேரத்திலும், காதலி வந்த பின் கடக்கும் நேரத்தின் போதும் நம் கையில் உள்ள கடிகார முள் ஒருபோல சீராக தான் இயங்குகிறது. ஆனால் கா காதலியின் வருகைக்கு முன்னும் பின்னும் காலத்தின்நகர்ச்சியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

அதாவது 1, 2 ,3 ,4, 5, 6, 7, 8, …. இப்படி தான் இயக்கம் சீராக நிகழ்கிறது. ஆனால் காலமோ அறிவுக்கு ஏற்ப 1, 2, 3, 5, 8 … இப்படி வருகிறது.

காலஅறிவு என்பது அறிவின் இறந்த – நிகழ் – எதிர் காலங்களின் கட்டமைப்பு. அதை இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உடல் ஒத்துழைப்பை பொருத்து இயல்பாகவும் அறிவியல்ரீதியிலும் திருப்ப முடியும்.

உதாரணமாக மனிதனின் நினைவறிவை மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் முறைகளின்படி இறந்தகாலத்துக்கு அழைத்து செல்லலாம்.

காலசக்கரம் என்பது ஒட்டுமொத்த காலஅறிவையும் அதாவது பிரபஞ்சத்தையே இறந்தகாலத்துக்கு திருப்புவது. உதாரணமாக மெஸ்மெரிசம் மூலம் மனிதனின் நினைவறிவை மட்டுமே இறந்த காலத்துக்கு திருப்ப முடியும். ஆனால் மனிதனையே திருப்ப முடியாது. அதாவது குழந்தை நினைவுகளை திருப்பும் அதேவேளையில் உடலையும் காலசூழலையம் இறந்த காலத்துக்கு திருப்ப முடியாது.

காலசூழலையே இறந்த காலத்துக்கு திருப்புவது தான் காலச்சக்கரத்தை திருப்புவது. அதாவது மனிதன் மனதோடு உடலையும் காலசூழலையும் குழந்தையாக திருப்புவது. இங்கு காலசூழலை திருப்புவது என்றால் அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது அவனோடு இருந்த காலசூழலையும் திருப்புவது.

உதாரணமாக நீஙகள் 7 வயதுக்கு காலசக்கரத்தை திருப்புவதாக வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் மட்டும் குழந்தையாக மாட்டீர்கள் உங்களோடு உங்கள் அம்மா அப்பா, தம்பி தங்கை, கூடபடித்த நண்பர்கள், ஆசிரியர், நாய்குட்டி, மரம், செடி கொடி, ஆறறுநீர் இப்படி அனைத்து சூழலுமே உங்களின் அதே குழந்தை பருவத்திற்கு திருப்பும். சுருக்கமாக உங்களோடு நேரடியாக மறைமுகமாக தொடர்பு உலகத்தையே( பிரபஞ்சத்தையே) உங்கள் குழந்தை பருவத்திற்கு திருப்புவது தான் காலசக்கரத்தை பின்னோக்கி திருப்புவது. இப்படி குழந்தை பருவத்தை மட்டுமல்ல முந்தைய பிறவிகள் என எவ்வளவு பின்னோக்கி வேண்டுமானாலும் திருப்பலாம்.

காலசக்கரத்தை திருப்ப முதலில் அதற்கு ஏற்ப நமது உடல்அறிவை தயார்படுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு நிகழ்காலத்தில் இருக்கும் அறிவு இறந்த காலத்தின் எதிர்காலம். இதை மீண்டும் இறந்தகாலத்துக்கு திருப்பும் போது அது இந்த நிகழ்காலத்தின் எதிர்காலமாக தான் வரும். இப்போது நமது நிகழ்காலாம் முந்தைய நிகழ்காலத்தின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்ற இருஅறிவுக்கு உட்படும். இப்போது நமது அறிவை மீண்டும் எதிர்காலத்துக்கு திருப்பினால் முந்தைய நிகழ்காலமே வரும். இதில் காலஅறிவு நமக்கு காலசக்கரமாக இருந்தால் மட்டுமே அறிவாக இருக்கும் இல்லையென்றால் அது மாயையாக தான் இருக்கும்.

இதை புராதாண கதைகளில் உதாரணப்படுத்தலாம்: மாயை என்றால் என்ன என்று கேட்ட ஒரு பக்தனிடம் தனக்கு தாகமாக இருக்கிறது ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீர் எடுத்துவர அனுப்புகிறார் இறைவன். தண்ணீர் எடுக்க சென்ற பக்தன் ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் மீது காதல்வசப்படுகிறான். அவள் பின்னால் செல்லும், பக்தன் அவளை திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறான். குழந்தைகள், பேரக்குழந்தைகள் பிறக்கிறது. பக்தனுக்கு வயதாகி காலங்களும் ஓடுகிறது. பக்தன் வெளியூர் சென்ற ஒரு நாள் திடீர் என ஊரெங்கும் வெள்ளபெருக்கு வந்து மக்கள் அனைவரும் நீரில் முழ்குகின்றனர். இதில் பக்தனின் மனைவி குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்படுகின்றனர். ஊருக்கு திரும்பிய பக்தன் தன் மனைவி குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகமாக ஆற்றங்கரை பக்கம் நடந்து செல்கிறான். அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த இறைவன் பக்தா நான் தாகத்துக்கு தண்ணீர்கேட்டேனே நீ கொண்டுவரவில்லையா என கேட்கிறார். அதிர்ச்சியடைந்த பக்தன் இறைவா உன் மாயையின் திருவிளையாடல் இப்போது புரிகிறது என காலில் விழுந்து வணங்குகிறான்.

இந்த கதை வெறும் உதாரணம் மட்டுமே. இதில உண்மை என்னவென்றால் காலஅறிவை பின்னோக்கி சுற்றும் போது நமக்கு காலசக்கரம் சாத்தியப்பட வேண்டும். இல்லையென்றால் எல்லாம் கனவாக அதாவது மாயையாக தான் இருக்கும். காலசக்கரம் என்பது மெய்ஞானம் அதாவது மாயையையும் ஜீரணித்துக்கொள்ளதக்க அறிவு. இன்னும் ஆழமாக சொன்னால் அறிவு மாயை இரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் மெய்யறிவு நமக்கு வேண்டும். இதை தான் ஆன்மீக ஞானிகள் ஞானமாக இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு மேற்சொன்ன விளக்கங்கள் அனைத்தும் நிச்சயம் குழப்பமாக தான் இருக்கும். இதற்கு நமது அறிவின் பொருளறிவு புரிதல் தான் காரணம். இந்த பிரபஞ்ச கட்டமைப்பை சரியாக புரிந்துகொள்ளும் போது நமக்கு காலசக்கரம் விடயம் எளிதான ஒன்றாகிவிடும். அதை பயிற்சி மூலம் நிரூபணப்படுத்தவும் செய்யலாம்.

இந்த பிரபஞ்சம் என்பது என்ன? பொருளாக இருப்பது என்ன? அடிப்படை இயக்கத்துக்கு காரணம் என்ன இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு, காலசக்கரம் குறித்து மனிபிறவியும் தொடர்வாழ்க்கையும் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா? பிரபஞ்சம் எப்படி தோன்றி இயங்குகிறது)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு… arivakam@gmail.com

பகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , ,

அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை – 15)

அக்டோபர் 5, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

சென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது தான் காலம்

இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம்.

அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன்.

இரு நிலைகள் பரஸ்பரம் பறிமாறும்போது இயக்கம் வருகிறது. இயக்கத்தின் படிப்படியான நிலைகள் காலமாகிறது. காலத்தின் பதிவுகள் அறிவு இயக்கமாகிறது.

இங்கு மீண்டும் குவாண்டவியலுக்கு போவோம்

எலக்ட்ரான்கள் உட்பட அடிப்படை துகள்கள் கணப்பொழுதில் அலையாகவும் பொருளாகவும் இருக்கும் என்பது அறிவியலாளர்கள் அறிந்ததே.

இங்கு பொருளாக இருக்கும் துகள் அலையாவதை இயக்கம் என்றும் பொருள் அலையாகி மீண்டும் பொருளாவதை ஒரு கால சுற்று என்றும் குறிப்பிடுகிறோம். இந்த கால சுற்றில் இறுதிக்கும் துவக்கத்துக்குமான தொடர்பு அறிவாகிறது. இடைப்பட்டதற்கான தொடர்பு மாயையாகிறது.

மேற்சொன்ன கருத்தை கம்பியூட்டர் மொழி கணக்கீடில் எளிமையாக புரிந்து கொள்ளலாம் 1 – 0 -1 இது தான் கம்பியூட்டர் மொழி. இதில் 1 பொருள் என்றும் 0 அலை என்றும் உதாரணப்படுத்திக்கொள்ளலாம். இங்கு முந்தை ஒன்றுக்கும் பிந்தைய ஒன்றுக்கும் நேரடி தொடர்ப்பு இருக்கிறது. ஆனால் 0 க்கு இல்லை. உண்மையில் 0 தான் பிந்தைய முந்தைய ஒன்றுகளுக்கு நெருக்கமானது. ஆனால் பிந்தைய ஒன்று அறிவதெல்லாம் முந்தைய ஒன்றை மட்டுமே. இப்படி முந்தைய ஒன்றும் இடைப்பட்ட 0 வாகி பிந்தைய ஒன்றாக மாறுவது ஒரு கால சுற்று. ஆனால் இயக்கம் என்பது இதில் பாதி. முந்தைய ஒன்று 0 ஆனாலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் மீண்டும் 1 வந்தால் மட்டுமே அறிவு வருகிறது. இந்த அறிவின் அளவீடாக காலமும் வருகிறது.

அடுத்த அறிவு கட்டமைப்பை பார்ப்போம்.

1 – 0 – 1 என்ற தொடர்ச்சியின் கட்டமைப்பு 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 இப்படி அமைகிறது. இதை பைனாரி முறை என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுவார்கள். அதாவது 0+1 = 1, 1 +1 =2, 2+1=3, 3+2=5, 5+3=8, 8+5=13 இப்படி கட்டமைக்கப்படுகிறது. இதில் 1, 0 வும் தான் அனைத்து முழுமையிலுமே இருக்கிறது என்றாலும் 0 இல்லாததாகவே இருக்கிறது. இதை தான் மாயை என்கிறது ஆன்மீகம். அதாவது 5 க்கும் 8 க்கும் இடையில் எண்கள் இல்லாமல் இல்லை ஆனால் பைனாரி கட்டமைப்பில் இல்லாத நிலைதான் அறியப்படுகிறது. அதே போல தான் அறிவும் காலமும் இயக்கமும்.

துகள் அலையானலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் அறிவு முழு சுற்றுகளில் மட்டுமே அறியப்படுகிறது. இந்த முழுச்சுற்றுகளின் அறிவுபடியே காலமும் இருக்கிறது.

ஒரு பொருளின் அடுத்தடுத்த பொருள் நிலைகள் அறிவாகவும் அதன் அளவீடு காலமாகவும் கட்டமைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பில் இருக்கும் எதிர்மறைகள் எல்லாம் மா¬யாயாக கொள்ளப்படுகிறது.

இங்கு கவனிக்க வேண்டியது மாயை இருந்தால் தான் அறிவும் காலமும் இயக்கமும் சாத்தியப்படுகிறது. அறிவும் மாயையும் இந்த இரண்டையும் ஆட்டிப்படைக்கும் மெய்யறிவும் தான் இந்த பிரபஞ்ச திருவிளையாடல்கள். (விரிவாக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்)

ஒவ்வொரு பொருளுக்கும் அது எலக்ட்ரான் ஆனாலும் சரி, ஃபோட்டான் சரி மரம் மனிதனானாலும் சரி அதற்கு இணையான எதிர் அலை இருக்கிறது. அதே போல ஒவ்வொரு அலைக்கும் அது ஒளியானாலும் சரி, மின்காந்த அலையானாலும் சரி அதற்கு இணையான பொருள் இருக்கிறது. இதற்கு அது மாயை அதற்கு இது மாயை அவ்வளவு தான்.

காலசுற்று அடிப்படையில் அறிவு இயக்கம் இருப்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். அடுத்து நமது எதார்த்த மாயைகளை கொஞ்சம் அலசிவிட்டு பிரபஞ்ச தோற்றம் குறித்து பார்க்கலாம்

மனிதனுக்குள் மடடுமல்ல பிரபஞ்சத்தில் இருக்கும் அத்துனை பொருளுக்குள்ளும் இருக்கக்கூடிய அறிவும் கால அளவீடுகளை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படுவது. மனிதனுக்கு இருக்கும் அறிவு விலங்குக்கு இருப்பதில்லை. விலங்குக்கு இருக்கும் அறிவு, தாவரத்துக்கு இருப்பதில்ல. தாவரத்துக்கு இருக்கும் அறிவு சட பொருளுக்கு இருப்பதில்லை. மனிதன் முதல் சட பொருள் வரை பிரபஞ்சத்துள் எல்லாம் பொருள் தான். ஆனால் இந்த பொருள்களுக்குள்ளேயே இருக்கும் அறிவு ஏற்றத்தாழ்வுடையது.

பொருளுக்கிடையே மட்டுமல்ல மனிதர்களுக்குள்ளேயே அறிவு ஏற்றத்தாழ்வுகள் உடையது தான். மனிதர்களுக்கு எல்லாம் ஒத்த தன்மையுடைய உணர்வு உறுப்புக்களை அறிவு நல்கியிருக்கிறது. அதனால் பேனா எல்லோருக்கும் பேனாவாக தெரிகிறது. ஒரு வேளை ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான அறிவு ஏற்றத்தாழ்வுகள் இருக்குமானால், நான் பேனா என்பதை நீங்கள் தூசு என்பீர்கள், நீங்கள் புழுக்கள் என்பதை நான்நீளமான ராட்சத பாம்புகள் என்பேன். நான் எரும்புகள் என்பதை நீங்கள் யானை கூட்டம் என்பீர்கள். நல்லவேளை இந்த கொடுமைகளை எல்லாம் இறைவன் செய்யவில்லை. பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒத்த அறிவை நல்கியிருக்கிறான். என்றாலும் நுண்ணிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கதான் செய்கிறது.

தீயை தொட்டால் எல்லோருக்கும் சுடுவதால் தீயை வெப்பம் என்கிறோம். ஒரு வேளை நீங்கள் தீயை தொடும்போது விரல் வெப்பத்தை உணராமல் குளிர்வதாக வைத் துக்கொள்ளுங்கள், நானோ தீயை வெப்பம் என்பேன். நீங்களோ குளிர் என்பீர்கள். இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? அதேபோல எனக்கு எலக்ட்ரான் களை மட்டுமே அறியக்கூடிய கண்கள்(விழிகரு) இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு பேனாவும் தெரியாது, புத்தகளும் தெரியாது. எல்லாம் எலக்ட்ரான்களாக தான் தெரியும்.

பொருளறிவு என்பது பொருளுக்கு பொருள், இயக்கத்துக்கு இயக்கம், நிலைக்கு நிலை மாறக்கூடியது. எந்தப் பொருளறிவும் நிலையானதோ முழுமையானதோ அல்ல.

இயக்கம் என்பது சார்புடையது. இரு நிலைகளின் சார்பு இன்றி இயக்கம் நிகழாது. அதேபோல தான் இயக்கத்தால் வரும் காலமும் அறிவும் சார்புடையது. காலமும் அறிவும் இருநிலை களையும் வைத்து தீர்மானிக்கப்படுவது. அதில் ஒரு நிலையை மட்டும் அறிந்துகொண்டு அதின் ஏற்றதாழ்வுகளை அறிவாக, காலமாக உணர்வதால் தான் பொருளறிவையும், பொருளறிவில் பொதிந்த பிரபஞ்சத்தையும் மாயை என்கிறது ஆன்மீகம்.

பிரபஞ்சக் கட்டமைப்பு என்பது ஒற்றையறிவாக அறியப்படுவதில்லை. எல்லாம் இரட்டையறிவாக தான் அறியப்படுகிறது. இதை எளிமையாகவே புறிந்து கொள்ளலாம்

அறிநிலை – அறியாநிலை, பரல் – பரவல், துகள் – அலை, பொருள் – வெளி, ஈர்ப்பு – விலக்கு, வெப்பம் – குளிர், நேர் – எதிர், உயர் – உயிரற்றவை, ஆண் – பெண், உள்ளே – வெளியே, மெய் – பொய், என பிரபஞ்சத்தின் அனைத்துமே இரட்டை நிலைகளில் தான் அறியக்கிடக்கிறது. இந்த இரட்டை தன்மைகள் ஒன்றை ஒன்று சார்ந்தது மட்டுமல்ல ஒன்றை ஒன்று பொய்யாக்கக் கூடியதும் தான்.

பரலை அறியும் போது பரவல் மறைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரவல் இல்லாமல் பரல் இல்லை என்பதையும் அறிவு அறிகிறது. இது எப்படி சாத்தியப்படுகிறது? என்பதில் தான் பிரபஞ்ச விதிகளுக்கான ரகசியங்கள் அடங்கிக்கிடக்கிறது. ( இது குறித்து விதிகள் பகுதியில பார்க்கலாம்).

வெளி, பொருள் இந்தஇரு அறிவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து, அதேநேரத்தில், ஒன்றை ஒன்று அழித்து(மறைத்து) அறியப்படுகிறது.

பொருளறிவின் சார்புநிலையான வெளியறிவை முழுமையாக அறியமால், பொருள் அறிவு அறிந்தவற்றை மட்டும் பிரபஞ்சம், வாழ்க்கை என கூறுவதை தான் ஆன்மீக ஞானிகள் மாயை(பொய்யறிவு) என்கிறார்கள்.

பொருளறிவும் மாயையானது. வெளியறிவும் மாயையானது. இந்தஇரு அறிவுகளையும் சீர்தூக்கிக்பார்க்கும் அறிவே உண்மையான மெய்யறிவு என்கிறது ஆன்மீகம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா?)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு… arivakam@gmail.com

பகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , ,

காலம் என்பது என்ன? (உலகின் அவசரத்தேவை – 14)

செப்டம்பர் 17, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.

காலம் என்பது என்ன?

போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுகள்களின் அலைவீச்சு அளவை வைத்து மீச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.

நாம் தனி ஊசலின் அளவை விநாடி என்கிறோம். அணுவியல விஞ்ஞானிகள் அணுதுகள் அலைவீச்சை விநாடி என்கிறார்கள் அளவு தான் வித்தியாசமே தவிர இயக்கம் ஒன்று தான்.

சரி அலைவீச்சு தான் காலமா? இல்லை. அலைவீச்சு என்பது நமக்கு காலத்துக்கான ஒரு அளவீடு. அதாவது காலத்தை அளக்க அல்லது தெரிந்து கொள்ள நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு அளவீடு.

காலத்தை விநாடி, மைக்ரோ செக்கென்ட, நேனே செக்கென்ட் என்ற அளவீடுகளை வைத்து கணிக்கிறோம். அல்லது அடையாளப்படுத்திக்கொள்கிறோம்.

காலத்தை அளக்கும் கருவிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அலைவீச்சை வைத்தே இயங்குகின்றன. அதாவது காலத்தை அளவிடுகின்றன.

அலை வீச்சு என்பது என்ன என பார்ப்போம்

அலைவீச்சு என்பதை முதலில் குவாண்டவியல் தத்துவத்தில் பார்க்கலாம்

ஒளியின் இயக்கத்தை தான் குவாண்டவியலில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள்.

ஒளியின் என்றால் துகளும் அலையும் மாறிமாறி வரும் ஒரு நிலை. கண்ணொளி, சூரிய ஒளி, மின்காந்த ஒளி இதெல்லாம் ஒளியின் வகைகள் அதாவது துகளும் அலையும் மாறிமாறி வரும் நிலையின் வகைகள்.

துகளும் அலையும் மாறி மாறி வருவது அதாவது ஆன்( on ), ஆஃப்(off ) இது தான் ஒளி. இதின் இயக்க வித்தியாசத்தையும் அறிவையும் பொருத்து ஒளியின் வகைகள் மாறுபடும். அந்த மாறுபாடுகளை தான் நாம் மைக்ரோ ஒளி, லேசர் ஒளி, எஃஸ் கதிர்கள், சூரிய ஒளி, கண்ணுரு ஒளி எனவெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம்.

சரி அப்படி ஆன்(on) ஆஃப்(off ) ஆக மாறுவது எது என கேட்டால் இப்போதைக்கு பொருள்- வெளி என எடுத்துக்கொள்ளுங்கள். பொருளாக இருப்பது என்ன என்பது குறித்து அறிவு விளக்கப்பகுதியில் பார்க்கலாம்.

பொருள் இருக்கு(on), இல்லை(off ). இதுதான் ஒளி. இந்த இயக்கம் தான் மின்காந்த அலைகள், அணுக்கரு உட்பட எல்லா அற்றல்களிலும் இருக்கிறது. பொருட்களிலும் இருக்கிறது.

இங்கு ஒளியின் இயக்கம் குறித்து ஒரு எதார்த்த ஐயம் வரலாம்.

ஆன் ஆப் தான் ஒளி என்பது சரி. ஆனால் அது எப்படி நகர்கிறது? ஒளியின் வேகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது எப்படி இடம்பெயர்கிறது?

உதாரணத்தில் விளக்கலாம். நிலையாக இருக்கும் ஒரு கடுகை(துகள்) நாம் கண்ணனால் பார்க்கிறோம். அது நிலையாக இருக்கும் போது கடுகு பொருள். அதை சுற்றியுள்ள பகுதி வெளி. இங்கு இனி கடுகு திசைவேகத்தில் இயங்குவதாக எடுத்துக்கொள்வோம். கடுகு நகர்கிறது. அப்போது நாம் மேல் சொன்ன தத்துவப்படி கடுகு மறைந்து அங்கு வெளி வரவேண்டும். வெளி மறைந்து கடுகு வர வேண்டும். கடுகு நகரக்கூடாது. தோன்றி மறைய வேண்டும் அப்படி தானே. ஆம் அது தான் அங்கும் நடக்கிறது.

கடுகு நகருகையில் நமது பார்வையும் நகர்குறது. அப்போது கடுகு வெளியை விலக்கி செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் அங்கு நமது பார்வை நகரவில்லை கடுகு மட்டும் நகர்வதாக வைத்துககொள்வோம். நாம் அறிவது என்ன? கடுகு மறைந்து விட்டது அவ்வளவு தான். நமது பார்வையும் நகர்வதால் கடுகு தோன்றி மறையாமல் நகர்வதாக நாம் அறிகிறோம்.

கம்பியூட்டர் மொழி தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும். கம்பியூட்டர் ஹார்ட் டிஸ்க் அல்லது செல்போன் சிம், மெம்மரி காடுகளில் இந்த இயக்கத்தை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஒருபுள்ளி அனைந்து மறுபுள்ளி தோன்றுவதில் தான் கம்பியூட்டர் மற்றும் மெம்மரிக்கார்டின் அடிப்படைமொழி(இயக்கம்) இருக்கிறது.

சரி அலைக்கு வருவோம் பொருள்(துகள்) அனைந்து மறைந்து மற்றதுகள் வருகிறது. ஆனால் அது எப்படி நகர்கிறது? அங்கு தான் அலை தத்துவம் புரியக்கிடக்கிறது. அலை என்றால் அதற்கு எல்லை கிடையாது அதே நேரத்தில் பொருளுக்கு எல்லையும் மையமும் இருக்கிறது. ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையையும் இழந்துவிடுகிறது. மீண்டும் அது பொருளாகும் போது சூழலுக்கு ஏற்ப அதாவது வெளிக்கும் பொருளுக்கும் உள்ள அறிவுக்கு ஏற்ப மைத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது.

உதாரணமாக ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகரத்தக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது. இது தான் அடிப்படை நகர்ச்சிக்கான தத்துவம்.

அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம்.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல.

சரி உதாரணங்களுடன் பார்ப்போம்.

பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு எனபது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொருத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் த்ததுவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை(பொருளை) பொருத்தது என்பது சரி.

ஆனால் நமக்குள் இங்கு எதார்த்தமாக எழும் ஐயம்

ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது இது ஒரு காலசுற்று. ஆனால் உயிரற்ற பொருட்களில் அப்படி இல்லையே கல் மண்ணாகிறதே தவிர மண் மீண்டும் கல்லாவதில்லையே.

இங்கு தான் அறிவு தேவைப்படுகிறது.

நம்முடைய(மனிதனுடைய உயிரிகளுடைய) அறிவு வளர்ச்சிதைவோடு ஒத்துபோய் விட்டது.

ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றினால் இயக்கங்கள் பின்னோக்கி வநதவண்ணமே நகர்கிறது. ஆனால் நமது எதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? அதாவது குழந்தை குமரனாகி கிழவனாது போல. அதே சீரோடு அச்சு பிழையாமல் கிழவன் குமரனாகி குழந்தையாக முடியுமா?

இது கொஞ்சம் அநாகரீகமான உதாணம் தான் அனால் புரிந்து கொள்வதற்கு எளிதானது. நாம் காலையில் உண்ட உணவு கழிவாகிறது. அதை பின்னோக்கி இயக்கினால் அதே கழிவு சென்ற அதே பயணததில் பாதையில் மீண்டும் உணவாகுமா?

இதற்கு பதில் ஆம் என்பது தான். அதாவது காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியும் என்பது தான் பிரபஞ்ச ரகசியம்.

நம்முடைய அறிவின் பயணம்(இயக்கம்) முன்னோக்கி மட்டும் செல்வதால் நமக்கு காலமும் முன்னோக்கி செல்கிறது. அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்.

இந்த ரகசியத்தை தான் ஆன்மீகஞானிகள் நமக்கு மெய்ஞானமாக போதித்துள்ளார்கள்.

அறிவு என்பது என்ன? அதை எப்படி பின்னோக்கி திருப்புவது? இயக்கமாக இருக்கும் பொருளிலும் வெளியிலும் என்ன இருக்கிறது? அடிப்படை பொருள் என்ன? அது எப்படி வந்தது? இது குறித்த விளக்கங்களை அடுத்தடுத்த பதிப்புகளில் பார்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிப்பில் ( மாயை என்பது என்ன? அறிவு என்பது என்ன? காலம் எப்படி வந்தது)

உலகளாவிய சிந்தனையாளர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு: அறிவகம் கட்டுரை தொடர் என்பது பொழுதுபோக்குகாகவும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவும் எழுதப்படுவது அல்ல. அறிவுபரிபூரணம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட காத்திருக்கும் கட்டுரை தான் இங்கு வலைபதிவில் பவனி வருகிறது. இதில் உலகளாவில் மேம்பட்ட ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். எந்த ஒரு சிந்தனையையும் உலகளாவில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் போது தான் முழுமையான உண்மை தன்மை ஒளிரும்.

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு… arivakam@gmail.com

பகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , ,

பொருள் அறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும் (உலகின் அவசரத்தேவை-13)

செப்டம்பர் 11, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

அனைவருக்கும் அறிவகத்தின் ஓணம் நல்வாழ்த்துக்கள்…

சென்ற பதிவில் நமக்குள் எழுந்த கேள்விகள் 1. நிலை என்றால் என்ன? அடிப்படை(ஆரம்ப) ஆற்றல் என்ன? இங்கு அது குறித்து பார்ப்போம்

நிலை என்பதை தான் அறிவு என்கிறோம். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மொத்தநிலை என சொல்கிறோம் அல்லவா? அதே அர்த்தத்தில் தான் இங்கு நிலையையும் குறிப்பிடப்படுகிறது.

பிரபஞ்ச அடிப்படையில இரண்டே நிலைகள் தான் 1, அறிநிலை. 2. அறியா நிலை. அறிநிலையை பொருள் என்கிறோம். அறியா நிலையை வெளி என்றோம். பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம். அந்த இயக்கத்தின் தொடர்ச்சி ஆற்றல். அந்த ஆற்றல்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு அறிவு.

உதாரணமாக நாம் மூளையில் அறிவு பதிவதை எடுத்துக்கொள்வோம். நம் மூளையில் உடல் இயக்கத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு பதிகிறது. இந்த நினைவுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஒருங்கிணைந்த நிலையிலேயே பதிகின்றன. அதாவது நமது மனதுள் ஏற்கனவே பதிந்துள்ள ஒரு நினைவை தொடர்புபடுத்தியே அடுத்த நினைவு பதிகிறது.

ஒரு குழந்தை புதிதாக ஒரு கழுகை பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் அது நம்மிடம் சொல்லும்போது அது காக்கா மாதிரி இருந்தது. அது மாதிரி இருந்தது இதுமாதிரி இருந்தது என்றெ சொல்கிறது. அதே அடிப்படையில் தான் நினைவும் பதிகிறது. நான், என் அம்மா, என் அப்பா எனது எனது என்று தனக்கு தொடர்புடைய ஒவ்வொன்றாகவே நினைவில் பதிகிறது. அதே தத்துவம் தான் பிரபஞ்சத்தின் அத்துனை அறிவிலும் இருக்கிறது.

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஆற்றல்களின் கோர்வை(கட்டமைப்பு) அறிவு எனப்படுகிறது.

அறிவு என்றால் மனிதனுள் இருக்கும் நினைவு மட்டுமே அல்ல. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நினைவு, சிந்தனை, இவையெல்லாம் மனிதனுள் இருக்கும் குறிப்பிட்ட சில அறிவுகள் அவ்வளவே.

அறிவு என்பது ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு. இது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். (மேலும் விரிவான விளக்கங்களை காலம் பகுதியில் பார்க்கலாம்.)

அடுத்து பொருள்அறிவு குறித்து பார்ப்போம்

மனிதர்களாகிய நாம் பொருளை மட்டுமே அறியும் ஆற்றல்களை பெற்றுள்ளோம். வெளியின் இயக்கங்கள் எதையும் நமது அறிவு அறிவதில்லை. இரு பொருட்களை அறியும் நமக்கு, இரு பொருட்களுக்கும் உள்ள இடைவெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடிவதில்லை.

பொருட்களை மட்டுமே அறியும் அறிவுத்தொகுப்பு பொருள்அறிவு எனப்படுகிறது.

பொருள் அறிவு பொதுவாக மனிதனுள் இயல்பறிவு, கருவியறிவு என்ற இரண்டு நிலைகளில் சாத்தியப்படுகிறது.

இயல்பறிவு என்பது மனிதன் உடல்உறுப்புகள் வழியாக நேரடியாக பொருளை உணர்ந்து கொள்ளும் அறிவு. கருவியறிவு என்பது கருவிகளின் உதவியுடன் மனிதன் பொருளை அறிந்து கொள்ளும் அறிவு.

உதாரணமாக: கல்லை நம்மால் நேரடியாக அறியமுடியும். ஆனால் கல்லின் அணுக்களை அறியமுடியாது. அதேநேரத்தில் எலக்ட்ரான் நுண்ணோக்கி என்ற கருவியை பயன்படுத்தி நம்மால் கல்லின் அணுக்களை அறிய முடியும். இதேபோல தான் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி, ஒலி, வெப்பம், நிறை, மின், வேதி, என எல்லாவகை ஆற்றலிலும் குறிப்பிட்ட தன்மைகளை (நிலைகளை) மட்டுமே நம்மால் இயல்பாகவும், கருவி உதவியுடனும் அறியமுடியும்.

குறிப்பிட்ட ஒளிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (கண்ணுரு ஒளி)
குறிப்பிட்ட ஒலிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (10 முதல் 20 டெசிபல் வரை)
குறிப்பிட்ட நிறையை மட்டுமே நாம் அறிகிறோம் ( )
குறிப்பிட்ட வெப்பத்தை மட்டுமே நாம் அறிகிறோம் ( )
குறிப்பிட்ட ஆற்றல்களை மட்டுமே நாம் அறிகிறோம் (ஒளி, வெப்பம், நிறை, மின்)
குறிப்பிட்ட இயக்கங்களை மட்டுமே நாம் அறிகிறோம் (இடம்ப்பெயர்ச்சி, சுழல்)
குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே நாம் அறிகிறோம்(நிலம்,நீர்,நெருப்பு,வாயு,வான்)

பிரபஞ்சத்தில் நிலவும் வெளியை நம்மால் அறியமுடியாது. ஏனெனில் அவற்றை அறிவதற்கான அறிவு நம்மிடம் இல்லை. ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள பொருள் அனைத்தையும் நம்மால் அறியமுடியும். (இங்கு பொருள் என குறிப்பிடப்படுவது திட, திரவ நிலையில் உள்ள பொருட்களை மட்டுமல்ல, காற்று, அலை, பிளாஸ்மா, அணுத்துகள் போன்ற நமது இயல்பறிவால் அறியமுடியாத பொருளையும் உள்ளடக்கிய மொத்தத்தையும் குறிப்பிடுவதே பொருள்)

பொருள் அறிவு, இயல்பறிவு, கருவியறிவு இவை புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்து பொருள் அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவு குறித்து பார்ப்போம்.

பிரபஞ்ச பொருளை நம்மால் எளிதில் அறியமுடிவது போல வெளியை அறியமுடிவதில்லை. வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாவிட்டாலும், எதுவுமே இல்லாத நிலையை அறியும்அறிவு மட்டும் நம்மிடம் உள்ளது. வெளியை பொருத்தவரை நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு எதுவுமேஇல்லை என்பது மட்டுமே.

பொருளை தாண்டிய வெளியை அறியும் அறிவை தான், பொருள்றிவுக்கு அப்பாற்பட்ட அறிவு என்கிறோம். வெளியில் என்ன இருக்கிறது? என்ன நிகழ்கிறது? அதன் இயக்க என்ன? என்பதை அறிந்துகொள்ளும் அறிவு வெளியறிவு. அனால் பொருளறிவில் கட்டப்பட்டுள்ள நமக்கு அது சாத்தியப்படாது. ஒன்று பொருளை அறியமுடியும் அல்லது வெளியை அறியமுடியும். இந்த இரண்டையும் ஒரே கணத்தில் அறிய முடியாது. அதாவது ஆன்(on) அல்லது ஆப்(off). இந்த ஆன்(on) ஆப்(off) நிலைகளை ஒரே காலத்தில்(நொடியில்) அறிய முடியாது.

இங்கு ஒரு ஐயம் வரலாம். அப்படியானால் பொருளை ஒதுக்கி வெளியில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் ஒரு கணத்தில் அறிய முடியும் தானே.

இப்படி சிந்தித்த சித்தர்கள் பொருளை ஒதுக்கி(இது மனிதனில் அவ்வளவு எளிதானது அல்ல) வெளியை மட்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களால் வெளியின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள முடிந்ததே தவிர அதை பொருளறிவில் விளக்க முடியிவில்லை. விளக்கவும் முடியாது. ஏனெனில் அப்படி விளக்க நினைக்கும்போதே அங்கு பொருளறிவு வந்துவிடுகிறது.

சில ஆன்மீகவாதிகள் பொருளறிவை விட வெளியறிவு சிறந்தது. மேலானது, உன்னதமானது, தெய்வீகமானது எனவெல்லாம் சொல்வது சுத்த பொய், மூடத்தனம். உண்மையில் பொருளறிவும் வெளியறிவும் சமபலம் வாய்ந்ததே. இதை நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு இயக்கத்துக்கும் அதற்கு இணையான எதிர்இயக்கம் உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. பொருளுக்கு நேர்எதிர் அறிவை(நிலையை) உடையதே வெளி. எனவே பொருளும் வெளியும் தன்மையிலும் மேன்மையிலும் இணையானதே தவிர ஒன்றை விட ஒனறு மேன்மையானது அல்ல.

இந்த பதிவின் சுருக்கம்:

1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள்
2. மையமும் எல்லையும் இல்லாத நிலை வெளி
3. பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம்.
4. ஒரு இயக்கம் மற்ற(வேறொரு) இயக்கத்தை ஏற்படுத்துமானால் ஏற்பட்ட இயக்கத்துக்கு ஏற்படுத்தும் இயக்கம் ஆற்றல்.
5. ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு அறிவு.
6. மையமும் எல்லையும் உள்ள ஆற்றல்கட்டமைப்பு(அறிவு) பொருளாக கொள்ளப்படுகிறது.
7. பொருளை மட்டும் அறியும் அறிவு பொருளறிவு, பொருளுக்கு அப்பாற்பட்ட வெளியை அறியும் அறிவு வெளி அறிவு.

இப்போதும் நமக்கு முன் வந்து நிற்கும் கேள்விகள்

1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள் என்பது சரி. அந்த நிலையில் பொருளாக என்ன இருக்கிறது?
2. முதல் நிலை பொருளில் இருக்கும் முதல்அறிவு என்ன? அல்லது ஆரம்ப ஆற்றல் எது?
3. பொருளும் ஆற்றலும் எப்படி வந்தது? எப்படி பிரபஞ்சமாக வியாபித்தது?

இந்த கேள்விக்கு விடைதேடும் முன்னர் காலம் குறித்து கொஞ்சம் விளக்கிக்கொள்ளலாம்

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்…. ( மாயை என்பது என்ன? காலம் எப்படி வந்தது? காலத்தை திரும்ப சுற்ற முடியமா?)

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு… arivakam@gmail.com

பகுப்புகள்: Uncategorized
குறிச்சொற்கள்: , ,

பிரபஞ்சத்தின் அடிப்படை இயக்கம் என்ன? (உலகின் அவசரத்தேவை – 12)

செப்டம்பர் 3, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

பொருள் என்பது என்ன?

‘அணுத்துகள்களின் பரஸ்பர பிணைப்பு நிலையான அணுமூலக்கூர்களின் கோர்வையே பொருள்’ என்கிறது அறிவியல். அணுத் துகள்களே அணுக்களாகவும் அணுக்களே மூலக்கூர்களாகவும், மூலக்கூர்களே பொருட்களாகவும், பொருட்களே பிரபஞ்சத்தின் அனைத்துமாகவும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது என்கிறது அறிவியல்.

நுண்ணோக்கி வழி பொருளை கூர்மைப்படுத்தி பிரித்து பிரித்து செல்லும் போது மூலக்கூறு நிலையில் இருந்தே பொருளை ஒளியாக தான் காண முடியும். அணுக்களை எல்லாம் அணு நிலையில் ஒளியாக தான் அறிய முடியம். அணுத்துகள்கள் எனப்படும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போட்டான் என்பவைகள் எல்லாம் ஒளிநிலையில் தான் அறியப்பட்டுள்ளன.

ஒளி தான் இன்றுவரை அறிவியல் நிர்ணியத்துவைத்துள்ள இறுதிப்பொருள் அல்லது மூலபொருள்.

ஒளி – இது ஆற்றலில் ஒருநிலை, அல்லது ஒருவகைஆற்றல் என்கிறது அறிவியல்.

பொருள் என்றால் என்ன? அதில் என்ன இருக்கிறது? என பொருளை நுணுங்கி, நுணுங்கி திரும்பத்திரும்ப ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு எஞ்சியது ‘‘ஒளியின் நிச்சயமற்ற தன்மை (துகள்-அலை)’ மட்டுமே. அணு, அணுக்கரு, அணுத்துகள்கள் இதெல்லாம் E=mc^ சமன்பாடுபடி தூயஆற்றலாகி விடும் என்கிறார் பேரரிஞர் ஐன்ஸ்டீன். அப்போது பொருள் என எதுவுமே இல்லை. எல்லாமே ஆற்றல்கள் என்ற முடிவுக்குத்தான் வருகிறார்கள் விஞ்ஞானிகள்.

இங்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கங்களுள் எல்லாம் நுழைய வேண்டாம்

பொருள் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு எளிமையான விளக்கத்தை எடுப்போம்.

பொருள் என்றால் துகள்நிலை. அதாவது மையமும் எல்லையும் உள்ளநிலை. அது அணுதுகளானாலும் சரி, பூமியானாலும் சரி, அளவு தான் சிறிது பெரிது என இருக்குமே தவிர எல்லாம் பொருள் தான். எல்லை(உருவம்) உள்ள எல்லாம் பொருள் தான்.

வெளி என்றால் பொருளுக்கு நேர் எதிரானது. அதற்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.
உதாரணமாக ஒரு கல்லை எடுக்கொள்ளலாம். அதற்கு மையமும் எல்லையும் இருக்கிறது. ஆனல் கல்லை சுற்றிய வெளிக்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.

அடுத்து இயக்கம் குறித்து பார்க்கலாம்

இயக்கம் என்பது பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாற்றம் கொள்வது. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஓடுதல், நடத்தல். சுற்றுதல், பறத்தல் இதெல்லாம் கூட்டு இயக்கங்கள். இந்த இயக்கங்களுக்கு எல்லாம் மூலமாக அல்லது அடிப்படையாக இருப்பது நிலைமாற்ற இயக்கம் தான்.

பொருள் வெளியாகும், வெளிபொருளாகும் இதுதான் அடிப்படைஇயக்கம். ஈர்ப்பு விலக்கு இதெல்லாம் இரண்டாம் படி இயக்கங்கள் தான்.

உதாரணத்தில் சொல்லவேண்டுமானால்

கம்யூட்டர் மொழி, சிப்புகள், டிரான்சிஸ்டர், மின்சார இயக்கம், திரைபடம், தொடர்விளக்கு இப்படி எல்லா இயக்கங்களையுமே சொல்லலாம். இந்த இயக்கங்களில் எல்லாம் அடிப்படை தோன்றி மறைதல் மட்டும் தான். அதாவது ஆன், ஆப். இது தான் அடிப்படை இயக்கம். அதில் ஆன் பொருள். ஆப் வெளி இந்த இரண்டும் மாறிமாறி வருவது தான் அடிப்படை இயக்கம்.

நாம் இயல்பு வாழ்க்கையில் இயக்கத்தை தொகுப்பு இயக்கமாகவும், அதன்மீது செலுத்தப்படும் அறிவை தொகுப்பு அறிவாகவும் கொள்வதால் இயக்கங்கள் பலவிதமாக தெரிகிறது. (இதுகுறித்து விரிவாக அறிவு பகுதியில் பார்க்கலாம்)

‘‘பொருள்-வெளி’’ நிலைமாற்றமே இயக்கம் இது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்து ஆற்றல் குறித்து பார்ப்போம்

இயக்கம் இயங்க காரணமாக இருப்பது, அல்லது இயக்கத்தை இயக்குவதை ஆற்றல் என்கிறோம். உதாரணமாக:&- அணு ஒரு பொருள். அணுவில் எலக்ட்ரான் சுழல்வது இயக்கம், எலக்ட்ரானை சுழற்றுவது ஆற்றல். நாம் ஒரு பொருள். நாம் ஓடுவது, சாடுவது, பேசுவது, உயிர்வாழ்வது இதெல்லம் இயக்கம். நாம் ஓட, ஆட, பேச, காரணமாக இருப்பது ஆற்றல்.

இயக்கம் இயங்க ஒரு இயக்குஇயக்கம் தேவை. அந்த இயக்குஇயக்கமே ஆற்றல்.

அதாவது ஒரு இயக்கத்திற்கு இன்னொரு இயக்கம் ஆற்றலாகிறது.

பிரபஞ்சத்துள் பலவகை ஆற்றல்கள் உள்ளது என்கிறது அறிவியல். ஒளிஆற்றல், வெப்பாற்றல், நிறைஆற்றல், காந்தஆற்றல், வேதிஆற்றல், உயிர்ஆற்றல், உணர்வாற்றல், நினைவாற்றல் என்பன பலஆற்றல் வகைகள். இது அல்லாமல் இன்னும் பல ஆற்றல் வகைகள் இருக்ககூடும் என்பதையும் அறிவியல் மறுப்பது இல்லை.

இப்படி பல்வேறு வகை ஆற்றல்களை அறிவியல் வியம்பினாலும், ஒளியாற்றல் தான் எல்லாவற்றிற்கும் மூல ஆற்றலாக கூறப்படுகிறது. ஒளியே மற்ற பல ஆற்றல் களாகவும் மாற்றப்படுவதாக அறிவியல் விளக்குகிறது.

ஒளி என்பது என்ன? அதிவேக இயக்கம் தான் ஒளி.

எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்தில் இயங்குமானால் அந்த பொருள் ஒளியாகிவிடும் என்று தானே ஐன்ஸ்டீன் அவர்களின் E=mc^ சமன்பாடு சொல்கிறது.

தெண்டுல்கர் மட்டையில் பட்ட பந்து ஒளியின் வேகத்தில் மைதான எல்லையை கடக்கு மானால் பார்வையாளர்கள் கண்ணில் படுவது எல்லாம் மட்டையோ பந்தோ அல்ல மாறாக மின்னல்(ஒளி) மட்டுமே.

மனிதஅறிவு இன்று வரை அறிந்திருக்கும் உச்சவேகம் ஒளியின் வேகம் தான். உச்சவேகத்தில் இயங்கும் ஒரு பொருளை மனிதஅறிவு ஒளியாக தான் அறிகிறது. உங்கள் வீட்டு மின்விசிறியை வேகமாக சுழலவிட்டுப் பாருங்கள். கண்ணுக்கு தெரிவது ஒளி மட்டுமே.

ஒளி என்பது அலை மற்றும் துகள் நிலைகளின் நிச்சயமற்ற வெளிப்பாடு. அதாவது துகளாகவும் இருக்க வேண்டும் அலையாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு நிலைகளும் ஒத்த கணத்தில் இருக்கவேண்டும். அதுதான் ஒளி. அப்படியானல் அங்கு கணிக்கமுடியாத அதிவேகம் இருக்க வேண்டும். அதாவது தொடர் இயக்கம் இருக்க வேண்டும். இந்த தொடர் இயக்கத்தை தான் ஆற்றல் என்கிறோம்.

சுருக்கமாக தொகுத்து சொல்கிறேன்.

1. மையமும் எல்லையும் உள்ள நிலையை பொருள் என்கிறோம்

2. மையமும் எல்லையும் இல்லாத நிலையை வெளி என்கிறோம்.

3. பொருளும் வெளியும் நிலைமாற்றம் கொள்வதை இயக்கம் என்கிறோம்

4. இயக்கம் இயங்க காரணமாக இருக்கும் இயக்கத்தை ஆற்றல் என்கிறோம்

5. ஆற்றலை அதிவேக இயக்கமாக அறிகிறோம்.

இபபோது நம்முன் வந்து நிற்கும் அடுத்தடுத்த கேள்விகள்

1. இந்த பிரபஞ்சத்தில் நிலவும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இன்னொரு இயக்கம் ஆற்றலாக இருந்துவருகிறது. அப்படி பார்க்கும் போது பொருள் வெளியாகவும், வெளி பொருளாகவும் மாறும் அடிப்படை இயக்கத்திற்கு எது ஆற்றல்? அது எபபடி வந்தது?

2. பொருளில் ஆற்றல்கள் தான் நிறைந்திருக்கிறது என்பது சரி. அப்படியானால் வெளியில் என்ன இருக்கிறது? அது ஏன் வேறுபட்டு நிற்கிறது.?

3. நிலை என்றால் என்ன? அது எப்படி வந்தது?

இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை அடுத்தப்பதிப்பில பார்க்கலாம்.

தொடர்ச்சி… அடுத்தடுத்த பதிப்பில் (பொருளறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும். பிரபஞ்சம் ஒன்றா பலதா? பூமி சுற்றுவது உண்மையா? காலம் எப்படி வந்தது?)

பின்குறிப்பு: வலைபதிவை காப்புரிமை(COPYRIGHT) பெற முடியுமா? எப்படி பெறுவது? தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள். நன்றி.

உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு arivakam@gmail.com

பகுப்புகள்: Uncategorized